முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படக்கூடிய திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 06-ந் தேதி காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்துள்ளனர்.
தொடர்ந்து இன்று திருச்செந்தூர் வந்த அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளனர்.
அப்போது கோவில் நிர்வாகத்தினர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கிரி பிரகாரத்தில் சுமந்து வந்த 51 பால் குடத்தையும் கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் கிரி பிரகாரம் முழுவதும் வழிந்தோடிய அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சுமார் 9- நாட்களாக 250- கிலோ மீட்டர்தூரம் பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தனி வரிசை இருந்தபோதிலும் அதை கோவில் நிர்வாகம் முறையாக கடைப்பிடிக்காமல் பாதையாத்திராக வந்த பக்தர்களின் வேண்டுதல்களை அலட்சியப்படுத்தி உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் மீது அரசுரையும் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.