Categories: தமிழகம்

பழனியில் பக்தர்களிடம் அத்துமீறும் திருநங்கைகள் : குவியும் புகாரால் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

பழனி மலை அடிவாரம், சுற்றுலா வாகன நிறுத்தும் இடங்கள் ,சன்னதி விதி ,கிரிவலப் பாதையில் திருநங்கைகள் ஏராளமானோர் யாசகம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் பக்தர்களிடம் இருந்து அதிகளவில் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் , திருநங்கைகள் பக்தர்களின் தலை மீது கை வைத்து யாசகம் கேட்பதும் , பக்தர்கள் பணத்தை கையில் எடுக்கும் போது பெரிய பணம் இருப்பதை பார்த்தால் உங்கள் பணத்தை கொடுங்கள் சுற்றி தருகிறோம் என்று தலையில் கை வைத்து கூறிவிட்டு பக்தர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் பத்து ரூபாய், அல்லது 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு சென்று விடுவதாகவும், புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் நாகல்நகர் சேர்ந்த இளைஞர் உமா சங்கர் (26) என்ற இளைஞர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது திருஆவின் குடி முன்புறம் அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் உமா சங்கர் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தலையில் கை வைத்து சுற்றி தருவதாக கூறிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் , என்னுடைய பணத்தை காவல் துறையினர் மீட்டு தர வேண்டும் என இளைஞர் திரும்ப ஊருக்கு செல்ல கூட பணமில்லை என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அடிவாரம் காவல் துறையினர் பாதிக்கபட்ட இளைஞருடன் சென்று இரு திருநங்கைகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பக்தரிடம் பணம் பிடிங்கி சென்ற அவந்திகா என்ற திருநங்கையை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இன்றும் இளைஞரிடம் பணத்தை பறித்த திருநங்கைகளை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

7 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

8 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

9 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

10 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

10 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

10 hours ago

This website uses cookies.