Categories: தமிழகம்

பழனியில் பக்தர்களிடம் அத்துமீறும் திருநங்கைகள் : குவியும் புகாரால் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.

பழனி மலை அடிவாரம், சுற்றுலா வாகன நிறுத்தும் இடங்கள் ,சன்னதி விதி ,கிரிவலப் பாதையில் திருநங்கைகள் ஏராளமானோர் யாசகம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் பக்தர்களிடம் இருந்து அதிகளவில் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் , திருநங்கைகள் பக்தர்களின் தலை மீது கை வைத்து யாசகம் கேட்பதும் , பக்தர்கள் பணத்தை கையில் எடுக்கும் போது பெரிய பணம் இருப்பதை பார்த்தால் உங்கள் பணத்தை கொடுங்கள் சுற்றி தருகிறோம் என்று தலையில் கை வைத்து கூறிவிட்டு பக்தர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் பத்து ரூபாய், அல்லது 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு சென்று விடுவதாகவும், புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் நாகல்நகர் சேர்ந்த இளைஞர் உமா சங்கர் (26) என்ற இளைஞர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது திருஆவின் குடி முன்புறம் அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் உமா சங்கர் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தலையில் கை வைத்து சுற்றி தருவதாக கூறிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் , என்னுடைய பணத்தை காவல் துறையினர் மீட்டு தர வேண்டும் என இளைஞர் திரும்ப ஊருக்கு செல்ல கூட பணமில்லை என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அடிவாரம் காவல் துறையினர் பாதிக்கபட்ட இளைஞருடன் சென்று இரு திருநங்கைகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பக்தரிடம் பணம் பிடிங்கி சென்ற அவந்திகா என்ற திருநங்கையை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இன்றும் இளைஞரிடம் பணத்தை பறித்த திருநங்கைகளை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

10 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

11 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

11 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

11 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

12 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

13 hours ago

This website uses cookies.