செங்கல்பட்டு : அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பள்ளி மாணவர் ஒருவர் கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேரம் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். ஒரு சில பகுதிகளில் குறைந்த பேருந்துகளே இயக்கப்படுவதால் வேலை செல்பவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என பேருந்து கூட்டமாக செல்வதை காணமுடிகிறது.
ஒரு சில பகுதிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் பள்ளி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்துள்ளனர்.
அப்போது படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்வாய்ப்பாக அந்த மாணவனுக்கு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்வதாகவும், பேருந்துகள் குறைந்த அளவே உள்ளதால் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுவதாக நெட்டிசன்கள் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.