திருச்சியில் தனது தாயை அடித்த 3வது கணவரை கத்தியால் கொன்ற மகன் மற்றும் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி, பாலக்கரை பகுதியில் சேர்ந்தவர் பரணிகுமார் (28). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி. இவர் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. பரணிகுமார் ஜோதி (45) என்பவருக்கு 3வது கணவனாவார்.
அண்மையில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஜோதிக்கும் பரணிகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் படிக்க: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… ஐஏஎஸ் ஆவதே இலட்சியம் என மாணவி காவ்ய ஸ்ரீயா பேச்சு..!!
இந்த நிலையில் வழக்கம்போல் இருவருக்கும் நேற்றிரவு திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தகராறு நடந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பரணிகுமார் ஜோதியை அடித்துள்ளார். அதனைக் கண்ட ஜோதியின் மகன் மாதேஷ் மற்றும் அவனது நண்பன் டோலு என்கிற முகமது தௌபீக் ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் பரணிகுமாரை குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பரணிகுமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மாதேஷ் மற்றும் அவரது நண்பர் முகமது தௌவ்பீக் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.