தாயை அடித்த 3வது கணவர்… கோபத்தால் கொலையாளியாக மாறிய மகன்… நண்பன் உள்பட இருவருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 1:08 pm
Quick Share

திருச்சியில் தனது தாயை அடித்த 3வது கணவரை கத்தியால் கொன்ற மகன் மற்றும் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி, பாலக்கரை பகுதியில் சேர்ந்தவர் பரணிகுமார் (28). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி. இவர் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. பரணிகுமார் ஜோதி (45) என்பவருக்கு 3வது கணவனாவார்.

அண்மையில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஜோதிக்கும் பரணிகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… ஐஏஎஸ் ஆவதே இலட்சியம் என மாணவி காவ்ய ஸ்ரீயா பேச்சு..!!

இந்த நிலையில் வழக்கம்போல் இருவருக்கும் நேற்றிரவு திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தகராறு நடந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பரணிகுமார் ஜோதியை அடித்துள்ளார். அதனைக் கண்ட ஜோதியின் மகன் மாதேஷ் மற்றும் அவனது நண்பன் டோலு என்கிற முகமது தௌபீக் ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் பரணிகுமாரை குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பரணிகுமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மாதேஷ் மற்றும் அவரது நண்பர் முகமது தௌவ்பீக் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 151

0

0

Leave a Reply