Categories: தமிழகம்

9 பேரின் உயிரை பறித்த சுற்றுலா…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!!

9 பேரை உயிரை பறித்த சுற்றுலா…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி பகுதிகளுக்கு 54 பேர், தனியார் சுற்றுலா அமைப்பின் ஏற்பாட்டின் பெயரில் சுற்றுலா சென்று இருந்தனர்.

அந்த பேருந்தானது நேற்று மாலை குன்னூர் மரப்பாலம் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளானது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா முடித்து மருதமலைக்கு செல்ல அந்த பாதையில் வந்துள்ளனர். அப்போது குன்னூர் மரப்பாலம் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும், மேல் சிகிச்சைக்காக உதகை, கோவை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்து நடந்த குன்னூர் மரப்பாலம் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். விபத்து எவ்வாறு நடந்தது என்பது பற்றி அதிகாரியிடம் விசாரித்து தெரிந்துகொண்டார். பின்னர் சிகிச்சை பெற்று வருவோர்களை சந்திக்க குன்னூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு விபத்தில் பலியாகி உயிரிழந்த 9 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விபத்து குறித்தும், உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

தற்போது வரையில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 30 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறிதளவு காயம் அல்லது காயம் இல்லாதவர்கள் 10 பேர் குன்னூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.