தமிழகம்

காற்றில் பறந்த எலி மருந்து.. 2 குழந்தைகள் பலியான சோகம்!

சென்னை குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பெற்றோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூர், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.‌ இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு விஷாலினி (6) மற்றும் சாய் சுதர்சன் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

மேலும், கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை இருந்துள்ளது. இதன் காரணமாக, அவ்வப்போது எலிகளைக் கொல்வதற்காக எலி மருந்து மற்றும் எலி பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்து உள்ளனர்.

இவ்வாறு எலியைக் கொல்வதற்காக வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில், அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவி உள்ளது. இந்த நெடியை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, உடனடியாக நான்கு பேரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர். மேலும், மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதையும் படிங்க: குடியால் சேர்ந்த நட்பு.. துரோகம் செய்த இளையராஜா ..அதிர்ச்சியில் ரஜினி

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மகள் விஷாலினி மற்றும் மகன் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேநேரம், கணவன், மனைவி இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

5 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

5 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

6 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

6 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

6 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

7 hours ago

This website uses cookies.