திருப்பூர் : தாராபுரம் பைபாஸ் சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் பைபாஸ் சாலையில் இன்று பெட்ரோல் இறக்கிவிட்டு பழனி சாலை வழியாக வந்த டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது பழனியில் இருந்து வந்த ஜவுளிக்கடை உரிமையாளரின் கார் டேங்கர் லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் தம்பம் பட்டியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா, இவரது தாயார் சரோஜா , மனைவி யசோதா, இவர்களது குழந்தைகள் ஹரிஹரன், கௌசல்யா ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஜவுளிக்கடை உரிமையாளர் தம்மம்பட்டி ராஜா மற்றும் அவரது தாயார் சரோஜா இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜவுளி கடை உரிமையாளரின் மனைவி யசோதா, இவர்களது குழந்தைகள் ஹரிகரன் , கௌசல்யா மூன்று பேரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியான ராஜா இவரது தாயார் சரோஜா ஆகியோரின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயங்கி விழுந்த விஷால் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருநங்கைகளுக்கான…
அதிக பட்ஜெட் வேணும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “LIK”. இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ்…
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
This website uses cookies.