சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்பொடி தூவி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது வீட்டின் காலின் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது. எனவே, பிரியங்கா கதவைத் திறந்து யார் என்று பார்த்து உள்ளார்.
இவ்வாறு பிரியங்கா வந்த அடுத்த நொடியே, காலிங் பெல் அடித்த நபர் அவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளார். தொடர்ந்து, பிரியங்க கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்த அந்நபர், அங்கு இருந்து உடனடியாக தப்பிச் சென்று உள்ளார்.
பின்னர், இது குறித்து போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில், பிரியங்காவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் என்பதும், அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம்லால் என்பதும் தெரிய வந்து உள்ளது.
மேலும், அவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதையும் அறிந்த போலீசார், அவரைப் பிடிப்பதற்கு உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது, அங்கு அவரைத் தேடிப் பிடித்த போலீசார், கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு.. திடீரென நுழைந்த அதிகாரிகள் : கட்டு கட்டாக பணம்? திரையுலகம் ஷாக்!
இந்த விசாரணையில், தனது மனைவி தங்கச் செயின் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக ராம்லால் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், செயின் பறிப்பு குறித்து புகார் அளித்த 6 மணி நேரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.