காலியானது திருக்கோவிலூர் தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த முடிவு? தேர்தல் ஆணையம் திட்டம்!!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.
இத்தகைய சூலில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. ஆனால் அவரது தொகுதி மட்டும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.
தொகுதி காலியானதாக அறிவித்தால் மட்டுமே அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக சட்டசபை சபாநாயகர் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க அவர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தான் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இததொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் விரைவில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அதாவது வரும் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.