வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக உட்பட்ட முத்துமுடி பகுதியில் 8 மாத குட்டியாக புலி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நல்ல நிலையில் அது உள்ளது.
தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தனி கூண்டு அமைக்கப்பட்டு தற்போது 9 மாதங்களாக வனத் துறையினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் கூறினர்.
இந்த நிலையில், அந்தப் புலி முயலை வாயில் கவ்வி கொண்டு செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனால், புலி வேட்டையாட பழகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த வீடியோவில், அடித்து வேட்டையாடும் காட்சி இல்லை. முயலை வாயில் கவ்வி செல்லும் காட்சிகள் மட்டுமே இதில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் பல மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.