Categories: தமிழகம்

5 வருடமாக காதலித்துவிட்டு பெண்ணை கழட்டி விட்ட விஏஓ : காதலிக்கு திருமணமாவதை தடுக்க இழிவான செயல்..!!

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.

2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) என்ற பெண்ண சந்தித்து நட்பு பாராட்டினார்.

நாளடைவில் நட்பு காதலாக மாறியது .ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் சிவரஞ்சனி தன்னை திருமணம் செய்து கொள்ள ராஜேஷை வலியுறுத்தினார்.

ராஜேஷ் பிடிவாதமாக சிவரஞ்சினியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் ஜாதக பொருத்தம் நமக்குள் சரியில்லை, எனவே இந்த திருமணம் நடைபெறாது என கூறி தப்பிக்க முயற்சித்தார்.

இதனைக் கண்ட சிவரஞ்சனி வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ராஜேஷை கட்டிப்பிடித்து ஓ வென அழுதுள்ளார். அழுததை ராஜேஷ் மறைமுகமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார்.

இதை அறியாத சிவரஞ்சனி சகஜ நிலைக்கு மாறி, சிவரஞ்சனி தனது வீட்டார் ஏற்பாடு செய்த , திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த, ஜானகிராமன் என்பவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது

இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் , ஜானகிராமனின் செல்பேசி எண்ணை பெற்று சிவரஞ்சனி தன்னை கட்டிப்பிடித்து அழுத புகைப்படத்தையும் இந்த பெண் என்னை காதலித்தார். ஆதலால் இந்த பெண் சரியில்லை என வாய்ஸ் மெசேஜும் அனுப்பி வைத்தார்.

இதை கண்ட ஜானகிராமன் தனது உறவினர்கள் 20 பேரை அழைத்து கொண்டு சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று ராஜேஷ்ஷூம், சிவரஞ்சினியும் இருந்த புகைப்படத்தை காண்பித்து இந்த பெண் காதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் திருமணம் செய்ய முடியாது , எனவே நாங்கள் நிச்சயதார்த்திற்க்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடு என கேட்டுள்ளார்கள்.

மேலும் இந்த திருமணம் நடைபெறாது எனக் கூறி சிவரஞ்சனியின் குடும்பத்தினர் உடன் உள்ள திருமண உறவினை துண்டித்தனர்.

திருமணம் தடைபட்டதால் ஆவேசமடைந்த சிவரஞ்சனியின் குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தனர் .

சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் ராஜேஷ் புகைப்படம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது .

கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ராஜேசை சாலவாக்கம் காவல் துறையினர் கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

டிஎன்பிஎஸ்சி படிக்க வந்த பெண்ணை ஐந்து வருடமாக காதலித்து திருமணம் செய்ய மறுத்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில் புகைப்படத்தினை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து திருமணம் தடை செய்த கிராம நிர்வாக அலுவலரின் வக்கிர புத்தி கண்டிக்கத்தக்கது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

3 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

3 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

4 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

5 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

6 hours ago

This website uses cookies.