கோவை : கோவை அருகே சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ம் தேதியன்று கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்பு உள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இரு சக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும்,
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற சரக்கு வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் மோதியதில் உயிரிழந்த இளைஞரின் உடலை சரக்கு வாகனம் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.