கோழி தீவனம் வாங்க வந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பல், மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பனமடங்கி பகுதியை சேர்ந்த கோழி பண்ணை உரிமையாளர் சுரேஷ் (25) என்பவர் கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக நேற்று இரவு வேலூருக்கு சரக்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
அப்போது கொணவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சுரேஷை வழிமறித்து கடத்தி கத்தியை காட்டி மிரட்டி இரண்டு லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
பின்னர் பணம் கொண்டுவர சொல்லி சுரேஷ் தனது குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளர்.தகவல் அறிந்து வந்த சுரேஷின் குடும்பத்தார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட கொணவட்டம் பகுதியை சேர்ந்த பாஷா, ரியாஸ், சித்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முனீர், நரேஷ் உள்படட 3 பேரை ஆகியோரை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.