வேலூர் ; காட்பாடி அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சிலக் மில் பகுதியில் நேற்று ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி திருச்சியை சேர்ந்த முபாரக் அலி, பூந்தமல்லியை சேர்ந்த ஸ்ரீதர், மேலும் ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர், ஆகியோரின் மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.
இதனையடுத்து, முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென மெதுவாகச் சென்று பிரேக் அடித்ததால், பின்னால் வந்த மூன்று கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக கார்களில் பயணித்த யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக காட்பாடி வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அடுத்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கார்கள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
This website uses cookies.