பிரதமர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாக, தெரு தெருவாக சென்று, வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையும் வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிரச்சாரத்தில் தீவிரமாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் பத்தலபல்லி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது :- 10 ஆண்டுகளுக்கு முன் 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: நாங்க நினைத்திருந்தால் மோடி ஜெயிலில் இருந்திருப்பாரு ; ஆனால்… ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்!!
அதே போல தங்கத்தின் விலை தற்போது கால் லட்சத்தைத் தாண்டியுள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தையும் நிறுத்தி விடுவார். அதனால் பிரதமர் மோடி ஆட்சி தொடரவே கூடாது, என கேட்டுக் கொண்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.