மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு காவல்துறை அனுமதியின்றி செல்ல முயன்றதாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது,
மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் சித்திக், மற்றும் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில தலைவர் டெய்சி ஆகியோர் புதூர் பகுதியில் இருந்து செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் அனுமதியின்றி செல்ல முயன்றதாக கூறி பாஜக நிர்வாகிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையை மீறியும் செல்ல முயன்றதால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உஉள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் காவல்நிலையம் முன்பாக திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து 3மணி நேரத்திற்கு பின்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு முன்பாக திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலையசெய்தனர்.
காவல்துறையினரை மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இது ஜனநாயக படுகொலை வழிபாட்டிற்கு தடை விதித்து கைது செய்யும் நடவடிக்கைக்கு ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும், விரைவில் ஒரு நாள் அனைவரையும் திரட்டி கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு செல்வோம் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் மற்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.