வேலூர் அருகே அரசு பள்ளி இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பிளேடால் கிழித்ததில் மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பூசாரி வலசை பகுதியை சேர்ந்த சுரேஷ் (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே ஊரை சேர்ந்த கமலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (14) படித்து வருகிறான். இதனிடையே நேற்று வகுப்பறையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் நேற்று காலையில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சுரேஷ் என்ற மாணவனை வழியில் தடுத்து நிறுத்தி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கிழித்துள்ளான்.
சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.