வேலூர் அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைத்தது தொடர்பாக முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ளது அன்னை கஸ்தூரிபாய் தெரு. இத்தெருவில் கடந்த 1-ந் தேதி புதியதாக தார்சாலை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைக்கப்பட்ட தார் சாலையானது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகவும், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே ஜல்லிகற்கள் சாலையில் இருந்து பெயர்ந்து வரும் நிலையில் இருந்துள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளி கீழே கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், தரமற்ற தார் சாலை குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், சாலை அமைக்கப்பட்ட போது மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது, என்றார்.
சாலை அமைக்கப்பட்ட போது அதை முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, அதன்படி, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று (05.12.2022) புதிய சாலையும் அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.