கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி, நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 500க்கும் மேற்பட்ட திரண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு 48 காலி பணியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்திருந்தது. இதனையொட்டி இன்று முதல் பத்து நாட்கள் நேர்முகத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இத்தேர்வில் கலந்து கலந்து கொள்ள 5906 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் நாளில் 500க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வருகை தந்ததால், அந்த சாலை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வருகை தந்த இளைஞர்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான தேர்வில் சைக்கிள் ஓட்டும் பயிற்சி,கால்நடை மாடு மேய்த்தல் பயிற்சி நடைபெற்றது.
மேலும், தொடர்ந்து 10 நாட்கள் நேர்முக தேர்வு நடைபெறும் எனவும், 5906 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 48 காலி பணியிடங்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது என மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.