Categories: தமிழகம்

ஆடையின்றி தோன்றி மாணவிகளுக்கு வீடியோ கால் : கல்லூரி சேர்மேனை கைது செய்ய மாணவிகள் போராட்டம்… ஸ்தம்பித்த போக்குவரத்து!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கேட்டரிங் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் சேர்மனாக தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் உள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன், இதே கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்ற தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடையே பரவியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மேனை கைது செய்ய வேண்டும் எனக் கூறி காலை முதல் கல்லூரி முன்பு மாணவ மாணவிகள் வகுப்புக்கு செல்ல மறுத்து முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து விசாரணைக்கு சேர்மேன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் கல்லுரி சேர்மன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவரை போராட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காவல்துறை அதிகாரி, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் முற்றுகை போராட்டம் நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் சேர்மனை அழைத்து வராத காரணத்தால் மாணவர்கள் விருதுநகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுரி சேர்மனை கைது செய்து வழக்கு பதிவு செய்து கல்லுரிக்கு அழைத்து வர வேண்டும் தங்கள் படிப்பு தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து வட்டாட்சியர் அறிவழகன் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று மாலைக்குள் சேர்மேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி போலீசாரிடம் மாணவிகள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் நகர் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக முன்னாள் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.