விருதுநகர் கணபதி மில் பிரிவில் தனியார் பேருந்து மீது பின்புறம் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37). இவரது மனைவி நிதர்ஷா (32). இவர்களுக்கு பிரணவ் ஆதித்யா (8), மற்றும் 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நான்கு நபர் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் பயணித்த கார் மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கணபதி மில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து தனியார் பேருந்து நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தது.
அப்பொழுது மனோஜ் ஓட்டி வந்த கார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மனோஜ் மற்றும் அவரது மனைவி நிதர்ஷா உயிர் இழந்தனர்.
மேலும் இவர்கள் குழந்தைகள் இருவரும் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.