விருதுநகர் கணபதி மில் பிரிவில் தனியார் பேருந்து மீது பின்புறம் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37). இவரது மனைவி நிதர்ஷா (32). இவர்களுக்கு பிரணவ் ஆதித்யா (8), மற்றும் 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நான்கு நபர் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் பயணித்த கார் மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கணபதி மில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து தனியார் பேருந்து நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தது.
அப்பொழுது மனோஜ் ஓட்டி வந்த கார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மனோஜ் மற்றும் அவரது மனைவி நிதர்ஷா உயிர் இழந்தனர்.
மேலும் இவர்கள் குழந்தைகள் இருவரும் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.