விருதுநகரில் அடுத்தடுத்த தெருக்களில் நடந்தேறிய கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வேல் சித்ரா. இவருடைய கணவர் தங்கராஜ் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பாண்டிச்சேரியில் பணிபுரிந்து வருகிறார். வேல் சித்ரா அவருடைய மகளின் கண் சிகிச்சைக்காக 10 நாட்களாக மதுரை சென்றதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை வீடு திரும்பிய வேல் சித்ரா வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஊரக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் அங்கு வந்த ஊரக காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்ததில், பீரோவை உடைத்து ஐந்து பவுன் நகை மற்றும் 6000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இதே போல், கம்பர் தெருவில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராஜா என்பவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரே நாளில் நடைபெற்ற அடுத்தடுத்து பகுதிகளில் நடந்தேறிய கொள்ளை சம்பவங்கள் குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றன. மேலும் இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.