விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றிய போது, தந்தை போட்டோவை எடுத்துக் கொண்டு கண்கலங்கி அழுதபடி வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியின் வீடியோ கண்கலங்கச் செய்துள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பெத்த மரத்து ஊரணியை தூர்வாரி பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 13 வணிக வளாகமும், 2 குடியிருப்பு வீடுகளும் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்த பள்ளி மாணவி ஒருவர், தனது பள்ளி பை பாட புத்தகங்கள் மற்றும் தனது தந்தையின் போட்டோவை எடுத்துக்கொண்டு கண் கலங்கி அழுதபடி நின்றிருந்தார்.
பெண் போலீசார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவியை வீட்டை விட்டு வெளியேற்றிய காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சோகமான பரிதாபக் காட்சி இணையதளத்தில் பரவியுள்ளது. இது அனைவரின் கல் மனதையும் கரைத்து கலங்கச் செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.