விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றிய போது, தந்தை போட்டோவை எடுத்துக் கொண்டு கண்கலங்கி அழுதபடி வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியின் வீடியோ கண்கலங்கச் செய்துள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பெத்த மரத்து ஊரணியை தூர்வாரி பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 13 வணிக வளாகமும், 2 குடியிருப்பு வீடுகளும் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்த பள்ளி மாணவி ஒருவர், தனது பள்ளி பை பாட புத்தகங்கள் மற்றும் தனது தந்தையின் போட்டோவை எடுத்துக்கொண்டு கண் கலங்கி அழுதபடி நின்றிருந்தார்.
பெண் போலீசார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவியை வீட்டை விட்டு வெளியேற்றிய காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சோகமான பரிதாபக் காட்சி இணையதளத்தில் பரவியுள்ளது. இது அனைவரின் கல் மனதையும் கரைத்து கலங்கச் செய்துள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.