மதுரையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்.
மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஷேர் ஆட்டோ களில் அதிகப்படியான பயணிகளையும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் ஏற்றி செல்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருவதோடு உரிய அனுமதி இன்றி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு புகார் வந்தது.
இதனை எடுத்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருந்து பெரியார் நோக்கி செல்லும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் நான்கு பயணிகளுக்கு பதிலாக எட்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினர். தொடர்ந்து இதுபோன்று உரிய அனுமதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களை இயக்கக் கூடாது எனவும் அளவுக்கு அதிகமாக பயணிகளையும் குழந்தைகளையோ ஏற்றி செல்லக்கூடாது எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.