ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு தனது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராததை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பாக ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆசிரியர்களை வைத்து ஆசிரியர்களின் கண்ணில் குத்துவார்கள், பிரித்தாலும் சக்தியை அரசுகள் எப்பொழுதும் செய்வதுதான் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கின்றனர்.
எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு விரைவில் இசைவு தெரிவிக்கும் வகையில் எங்களின் போராட்டம் நிச்சயம் இருக்கும்.
அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம், அரசாணை 243 திரும்ப வரும் வரை ஓய மாட்டோம் என டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாணை 243 ரத்து செய்ய கோரி டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாளும் தலைமைச் செயலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.