Categories: தமிழகம்

பட்டு நூல் விலை இரு மடங்கு உயர்வுக்கு எதிர்ப்பு : 10 நாட்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் பட்டுநூல் விலையை குறைக்கக்கோரி இன்று முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது.

ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை, கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைத்தறி பட்டு சேலை நெசவு செய்வதற்கான முக்கிய மூலப்பொருளான பட்டு நூல் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி பட்டு நூல் சேலை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பட்டு நூல் ஒரு கிலோ 3,000 முதல் 3,500 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்பொழுது 6,000 முதல் 6,500 வரை விற்பனை ஆவதால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டு நூல் விலை உயர்வால் பட்டு சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பட்டு நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளித் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெசவாளர்கள் பட்டுநூல் வார்ப்பையும் நெசவு செய்வதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.