பல வருடங்களாக ஜோடியாக ஊர் ஊராக சுற்றி வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த 9ம் தேதி திருமணம் செய்தனர். பலரும் இவரது திருமணத்தை வாழ்த்தி வருகின்றனர்.
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஆரம்பத்தில் நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கையை தவிரித்து விமர்சனங்களை எதிர்த்து தனது கேரியரில் கவனம் செலுத்தி டாப் நடிகையாக வந்தார்.
வாழ்வில் எத்தனை விரிசல் விழுந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து மீண்டும் சினிமாவில் சாதித்து காட்டிய அவர், தனித்துவ நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார்.
போடா போடி படம் மூலம் இயக்குநரானவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் நயன்தாராவுக்கு என்ன சம்மந்தம்.. எப்படி இவர்களுக்குள தொடர்பு ஏற்பட்டது என்பதற்கெல்லாம் விடை நடிகை சமந்தா தான்.
2012ல் வெளியான போடா போடி படத்திற்கு பின்பு வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டவர் விக்னேஷ் சிவன். பின்னர் நானும் ரௌடி தான் படத்தை எடுக்க முடிவு செய்த அவர், முதலில் அனிருத் மற்றும் சமந்தாவை வைத்து இந்த படத்தை இயக்க நினைத்தார்.
ஆனால் அனிருத், படத்திற்கு இசையமைக்கிறேன், நடிப்பு வேண்டாம் என சொல்லிவிட்டார். பின்னர் கதாநாயகர்களுக்காக அலைந்த அவர், அசோக் செல்வன் உட்பட பல பிரபலங்களை அணுகினார். ஆனால் அவர்களெல்லாம் நோ சொல்ல, ஒகே சொன்னார் விஜய் சேதுபதி.
ஹீரோ கிடைத்தது தாமதம் தான் என்றாலும், கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தாவோ, இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டே சாரி இனி இந்த படத்துல நடிக்க முடியாது என செல்லமாக கூறிவிட்டாராம்.
விஜய் சேதுபதியுடன் நடிக்க வைக்க கதாநாயகியை தேடிய போதுதான், நயன்தாராவை சந்தித்து கதையை ஓகே செய்தாராம்.. கதையை மட்டுமல்ல வாழ்க்கையும் அவருடன் தான் என விதி எழுதிவிட்டது போல.
இப்படி மலர்ந்ததுதான் இவர்களது காதல். தற்போது கல்யாணம் ஆன இருவரும், இனி படங்களில் தொடர்ந்து நடிப்போம். உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என கூறியுள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.