Categories: தமிழகம்

பழனி கோவில் கருவறைக்குள் பிரமுகர்களுக்கு என்ன வேலை? சந்தேகத்தை கிளப்பிய இந்து தமிழர் கட்சி பிரமுகர்!!

பழனி திருக்கோவிலில் ஆகமத்திற்கு விரோதமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் வம்பாபிஷேகம் நடத்தியுள்ளனர் என இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர்.ராம ரவி குமார் ஜி கூறியுள்ளார்.

இந்து தமிழர் கட்சியின் மாநாடு மற்றும் இந்து தமிழர் கட்சியின் இணைப்பு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரத்தில் நடந்தது.

இதில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், சிவனடியார்கள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்.ராம ரவிக்குமார் ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “பழனி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தமிழக அறநிலையத்துறை அமைச்சர் உட்பட பலர் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் சென்று உள்ளனர்.

இது ஆன்மீகத்துக்கு நல்லதல்ல. கோவில் கருவறைக்குள் பூஜையில் ஈடுபடுபவர்களை தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை அப்படி இருக்கும்போது அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு கருவறைக்குள் என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது.

நவபாசான சிலை எந்த அளவில் உள்ளது என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்துக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவறைக்குள் சென்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு பழனி முருகனின் நவபாஷாண சிலை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அறநிலையத்துறை ஊழல் பெருச்சாளிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

9 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

9 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

10 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

10 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

11 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

11 hours ago

This website uses cookies.