Categories: தமிழகம்

எங்க சம்பளமெல்லாம் அரசினர் விருந்தினர் மாளிகைக்கே போகுது : நீதி வேண்டி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!

கோவை : கோவையில் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு தங்கள் சம்பளத்தை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கோவை மாவட்ட வருவாய் நிர்வாகத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகுந்த முகாந்திரம் இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், நியாயமற்ற காரணங்களுக்காக விளக்கம் கேட்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

ஆய்வுக் கூட்டங்களில் கடுமையாக நடந்து கொள்வது கோப்புகளில் கையொப்பம் இடுவதற்கு நீண்ட நேரம் காக்க வைப்பது கோப்புகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை மாவட்ட வருவாய் அலுவலர் நிறுத்த வேண்டும்.

அரசு விருந்தினர் மாளிகைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மேற்கொள்ளப்படும் செலவினங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து கூறிய அவர்கள், அரசு விருந்தினர் மாளிகைக்கு முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கான செலவுகளை அலுவலர்கள் தங்களது சம்பளத்தை கொண்டு செலவிடுவதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் அலுவலர் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கோப்புகளில் கையொப்பம் பெற சென்றால் நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும் சில நேரங்களில் கோப்புகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும் நியாமற்ற காரணங்களுக்காக வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்கும் பொழுது அது குறித்து விளக்கம் கேட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். முகாந்திரம் இல்லாமல் துணை வட்டாட்சியர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இவற்றை எல்லாம் குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் மேற்கொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் திங்கட்கிழமை முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

1 hour ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

2 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

4 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.