Categories: தமிழகம்

ஆட்சி அமைப்பது யார்? நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன பதில்.. கேள்வி மேல் கேள்வி கேட்டதால் மழுப்பல்!

மாற்றம் சேவை அமைப்பு மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.. அந்த வகையில் இன்று வியாசர்பாடி எஸ்.எம். நகர் மைதானத்தில் வடசென்னை பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்களுக்கு 100 கிட்டுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

கால்பந்தாட்டா வீரர்களுக்கு கிட்களை ராகவா லாரண்ஸ் வழங்கினார். இதற்கிடையே ராகவா லாரண்ஸிடம் புகைப்படம் எடுத்த இளைஞர்களின் கூட்டமும், ஆட்டோ வழங்கி உதவி புரிந்த அந்த பெண்களின் கூட்டமும், மனு கொடுக்க வந்த கூட்டமும் ராகவா லாரன்ஸை நெரித்தது..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது,

போதைக்கு இளைஞர்கள் சிலர் அடிமையாகி இருப்பதாகவும், விளையாட்டினை ஊக்குவிக்க வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இங்கு வந்ததாகவும், பல பேர் ஷூ இல்லாமல் விளையாடுவதை கண்டு மனம் வருந்தியதாகவும், இதனால் 100 கால்பந்து வீரர்களுக்கு கிட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

வடசென்னையில் விளையாட கிரவுண்ட் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறிய கேள்விக்கு, நிறைய பேரு விளையாட்டு பத்தி தான் மனு அளித்திருப்பதாகவும், அதை படித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மதர் தெர்சா, வாழும் தெய்வம் என பல பெயர்களை வைத்து கூப்பிடுகிறார்கள்,அதை மனதில் வைத்து கொள்வேன் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன்…

செல்லும் இடங்களிலெல்லாம் அரசியலுக்காகவா இது என கேள்வி கேட்கிறார்கள், தான் சேவைக்காக செல்கிற இடம் எல்லாம் கோவில் என்று நினைக்கிறேன், திருப்பதிக்கு சென்று உண்டியலுக்கு பணம் போடுவது போல தான் இந்த கோவிலுக்கு சென்று உதவி செய்கிறேன் அவ்வளவு தான்..

அடுத்ததாக விதவை பெண்களுக்கு 500 தையல் மிஷின் கொடுத்த திட்டம்..

பள்ளி மாணவர்களின் பைகளிலே போதை பொருள் இருப்பதை கண்டதாகவும், விளையாட்டினை ஊக்குவிக்க வேண்டும் எனக்கூறி அழைத்ததினால் இங்கு வந்ததாகவும், உடலை தான் ஆரோக்கியமாக வைத்திருக்க காரணம் டான்ஸ் தான் அதை போல இளைஞர்களும் போதை பொருள் போன்றவற்றை விட்டு விளையாட்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..

தமிழகத்தில் போதை பொருள் அதிகம் உலாவுவதாக சொல்கிறார்கள், விரைவில் சரியாகி விடும் என மற்றவர்களை போல் தானும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜூன் 4 ஆம் தேதி ஜெயிக்க போறவங்களுக்கு வாழ்த்துகள், தோற்பவர்களுக்கு அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகள் என மழுப்பலாகவும், அரசியல் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

51 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

1 hour ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 hours ago

This website uses cookies.