Categories: தமிழகம்

நான் வர வழியில் யாரு காரை நிறுத்தியது.. ஆவேசமாக காரை துரத்திய பாகுபலி.. ஷாக் VIDEO!

நான் வர வழியில் யாரு காரை நிறுத்தியது.. ஆவேசமாக காரை துரத்திய பாகுபலி.. ஷாக் VIDEO!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில் காட்டு யானை பாகுபலி தினம்தோறும் நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து கல்லாருக்கும் அதே போல கல்லாரில் இருந்து நெல்லி மலைக்கும் இடம்பெயர்ந்து வருகிறது.

அப்படி இடம் பெறக்கூடிய காட்டு யானை இந்த இரண்டு வனப்பகுதிக்குள் நடுவே உள்ள சமயபுரம் கிராமத்தின் வழியாக சாலையைக் கடந்து சென்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லிமலையில் இருந்து கல்லார் வனத்திற்கு சென்ற காட்டு யானை பாகுபலி இன்று காலை மீண்டும் நெல்லி மலை வனத்திற்கு செல்ல பவானி ஆற்றினை கடந்து வந்தது.

அப்போது சமயபுரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையின் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த சாலை மார்க்கமாக ஆல்டோ கார் ஒன்று வந்தது.

யானை இருப்பது தெரியாமல் அந்த கார் வந்து கொண்டிருந்த நிலையில் அங்க இருந்து பொதுமக்கள் எச்சரிக்கை செய்து காரை நிறுத்துமாறு கேட்டுள்ளனர்.

அவரும் காரை நிறுத்திய நிலையில் திடீரென காட்டு யானை பாகுபலி அந்த காரினை துரத்திச் செல்ல துவங்கியது இதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் சுதாரித்து யானை அருகில் வந்தவுடன் விரைவாக காரை எடுத்துச் சென்றார்.

மேலும் படிக்க: அமைச்சரின் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. கட்டு கட்டாக சிக்கிய பணம் ; அரசியலில் ஷாக்!

இதனை அடுத்து சற்று தூரம் காரின் பின்னால் சென்ற காட்டு யானை பின்னர் காரை துரத்துவதை விட்டுவிட்டு சாலையில் நடந்து சென்று அருகில் இருந்த நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது.

வறட்சி துவங்கிய நிலையில் யானைகளின் நடமாட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வனத்துறையினர் இந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த கிராம மக்கள் நடைபெறுவதற்குள் நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இதுவரை சென்று வந்த பாதையை மாற்றி உள்ள காட்டு யானை பாகுபலி தற்பொழுது புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தி அதில் செல்வதால் சாலையில் வெகு தூரம் நடந்து காட்டு யானை நெல்லி மலைக்குள் செல்கிறது. எனவே வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.