கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்- கவிதா தம்பதிகிள். கவிதாவை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் கவிதாவின் உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார்.
ஆனால் இதற்கு பிரபாகரன் உங்கள் வீட்டுக்கு எல்லாம் என்னால் தங்க முடியாது என்று மறுத்ததால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா…? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.