பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரத விதமாக அரசு பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் அரசு பஸ்ஸின் சக்கரத்தில் விழுந்தார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அவரது கணவன் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்தார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், அரசு பஸ் ஓட்டுனர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பான பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.