விழுப்புரம் : குடும்ப பிரச்சனையால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (வயது 42) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 40).
இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கு மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமி வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கிழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து கணவர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவர் மனைவி பிரச்சனையில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.