Categories: தமிழகம்

சாலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி : தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை…

மதுரை : அலங்காநல்லூர் அருகே இளம்பெண் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வேங்கையன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் கணவரை பிரிந்து, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறவன்குளத்துக்கு திரும்பி வந்த வேங்கையன், மனைவி கண்ணம்மாளை சமரசம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று சாலையோரத்தில் கண்ணம்மாள் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார்.

கண்ணம்மாளை வெட்டி படுகொலை செய்த கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் கண்ணம்மாளின் கணவர் வேங்கையன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கண்ணம்மாளின் கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கிய பின்பு கண்ணம்மாளின் கொலைக்கான முழுவிபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KavinKumar

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

6 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

7 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

8 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

9 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

9 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

9 hours ago

This website uses cookies.