அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை, கணவன் கண்முன்னே காட்டு யானை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டுவதற்காக இன்று காலை பால் வடிக்கும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென குட்டியுடன் வந்த பெண் யானை பால் வடிக்கச் சென்றவர்களை விரட்டியது. இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஞானவதியை (வயது 50) யானை மிதித்து கொன்றது. மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்து தப்பினர்.
கடந்த சில தினங்களாக அந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், யானைகளை விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
ஞானாவதியின் கணவர் மோகன்தாஸ் உதவிக்கு சென்ற நிலையில், கணவர் கண்முன்பே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது சிற்றார் தோட்ட தொழிலாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.