கோவை : வால்பாறை அருகே சாலையை கடக்க உதவிய வனத்துறையினருக்கு தும்பிக்கையின் மூலம் லால்சலாம் போட்ட ஒற்றைக்காட்டு காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட தற்பொழுது கோடை வெயில் தாக்கத்தினால் வனப்பகுதி ஒட்டி உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் உலா வருகிறது. ஆழியார் அணை, சோலையார் அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் பகுதிகளில் நீர் தேடி வருகிறது.
காட்டு யானை கூட்டங்கள் நீர்நிலையில் தண்ணீர் தேடி வருவதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் இருக்க கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை கடக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானை, சாலையைக் கடக்க வனத்துறையினர் வழி விட்டனர். இதனால் தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்துக்கு சென்ற ஒற்றைக் காட்டு யானை, தும்பிக்கை தூக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று ஸ்டைலாக மரியாதை செலுத்தியது.
பின்னர், அங்கிருந்து ஓடிய யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.