கோவை : வால்பாறை அருகே சாலையை கடக்க உதவிய வனத்துறையினருக்கு தும்பிக்கையின் மூலம் லால்சலாம் போட்ட ஒற்றைக்காட்டு காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட தற்பொழுது கோடை வெயில் தாக்கத்தினால் வனப்பகுதி ஒட்டி உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் உலா வருகிறது. ஆழியார் அணை, சோலையார் அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் பகுதிகளில் நீர் தேடி வருகிறது.
காட்டு யானை கூட்டங்கள் நீர்நிலையில் தண்ணீர் தேடி வருவதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் இருக்க கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை கடக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானை, சாலையைக் கடக்க வனத்துறையினர் வழி விட்டனர். இதனால் தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்துக்கு சென்ற ஒற்றைக் காட்டு யானை, தும்பிக்கை தூக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று ஸ்டைலாக மரியாதை செலுத்தியது.
பின்னர், அங்கிருந்து ஓடிய யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.