தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலரிடம் பொறுப்பற்ற முறையில் பேசும் செயல் அலுவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட முகாம்களில் உடல் ஊனமுற்ற மற்றும் உடல் நலம் சரியில்லாத பெண்களுக்கு பதில், அவரது கணவன்மார்கள் மனுக்களை வழங்க வந்தபோது, முகாம்களில் உள்ள அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலர் ஜீவநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 15வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா கேட்டார். அப்போது, செயல் அலுவலர் அந்த கவுன்சிலரிடம், “இந்த கதை எல்லாம் என்கிட்ட கேட்க கூடாது, எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய வேலை மெட்டீரியல் சப்ளை செய்வது மட்டுமே,” என பொறுப்பில்லாமல் திமிராக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது கன்னியாகுமரி பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசின் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு ஒரு பேரூராட்சி மன்ற உறுப்பினரிடம் கூட பொறுப்பாக பதில் கூற முடியாத இந்த செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
This website uses cookies.