Categories: தமிழகம்

இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சத்யா கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சத்யாவை தலைப்பிரசவத்திற்காக மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு அனுமதித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் சத்யாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி, சத்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு காரணமாக சரியான மருத்துவ உதவிகள் யாருக்கும் கிடைக்கவில்லை என பலர் புகார் கூறிவருகின்ற நிலையில், அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவது வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் பிரசவித்த குழந்தையும் தாயும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதுபோலவே, மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் பிரசவத்தின் போது தற்போது இறந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

3 minutes ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

16 minutes ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

36 minutes ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

16 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

17 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

17 hours ago

This website uses cookies.