பல பெண்களுடன் தனிமையில் இருந்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து மிரட்டுவதாக தன் கணவன் மீது தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஒரு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (30) என்பவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் குடும்பத்துடன் சென்று மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த 36 வயது நபருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
என் கணவர் தஞ்சையில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் உள்ள எனது கணவர் அக்கா வீட்டிற்கு சென்று ரயிலில் திரும்பினோம். அப்போது, அவரது செல்போனில் இருந்து போட்டோ அனுப்ப முயன்ற பொழுது, பல பெண்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம், நிர்வாணமான பல பெண்களுடன் பேசிய படங்களின் போட்டோ மற்றும் ஆபாச போட்டோக்கள் இருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது யாரிடம் கூறக்கூடாது. மீறினால் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதேபோல் அவரது பெற்றோரும் என்னை அச்சுறுத்தினர். மேலும், அவர் எனது கழுத்தை நெரித்து என்னை மிதித்ததால் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இது தவிர என் கணவருக்கு இதற்கு முன்பே வேறு திருமணம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய சட்டப் பிரிவின் கீழ் என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.