கோவை : சூலூர் அருகே ஓடும் பேருந்திலிருத்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகிதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பால்பாக்கெட் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (வயது 37) ப்யூட்டீசனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இன்று ஈரோட்டில் நடக்க இருந்த ஒரு திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்ய சம்மதித்திருந்தார். அதற்காக நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஈரோடு அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தின் ஓட்டுநராக பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் நடத்துநராக பாபு என்பவர் இருந்துள்ளனர். டிக்கெட் வாங்கிய சிவசக்தி ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்தில் தானியங்கி கதவுகள் கோளாறு காரணமாக மூடப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பேருந்து பொள்ளாச்சி ,பல்லடம் சாலையில் சுல்தான்பேட்டை தாசநாய்க்கன்பாளையம் தாண்டி வந்து கொண்டிருந்தபோது சீட்டில் அமர்ந்திருந்த ப்யூட்டிசன் சிவசக்தி திடீரென எழுந்து பேருந்தின் முன்புற படிக்கட்டின் பகுதிக்கு திடீரென எழுந்து வந்தவர் பேருந்தில் இருந்து திடீரென வெளியே குதித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது ப்யூட்டீசன் சிவசக்தி மண்டை பிளந்து துடிதுடித்து இறந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிவசக்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வேளை தானியங்கி கதவு பழுதாகாமல் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என சக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.