கோவை : சூலூர் அருகே ஓடும் பேருந்திலிருத்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகிதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பால்பாக்கெட் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (வயது 37) ப்யூட்டீசனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இன்று ஈரோட்டில் நடக்க இருந்த ஒரு திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்ய சம்மதித்திருந்தார். அதற்காக நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஈரோடு அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தின் ஓட்டுநராக பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் நடத்துநராக பாபு என்பவர் இருந்துள்ளனர். டிக்கெட் வாங்கிய சிவசக்தி ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்தில் தானியங்கி கதவுகள் கோளாறு காரணமாக மூடப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பேருந்து பொள்ளாச்சி ,பல்லடம் சாலையில் சுல்தான்பேட்டை தாசநாய்க்கன்பாளையம் தாண்டி வந்து கொண்டிருந்தபோது சீட்டில் அமர்ந்திருந்த ப்யூட்டிசன் சிவசக்தி திடீரென எழுந்து பேருந்தின் முன்புற படிக்கட்டின் பகுதிக்கு திடீரென எழுந்து வந்தவர் பேருந்தில் இருந்து திடீரென வெளியே குதித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது ப்யூட்டீசன் சிவசக்தி மண்டை பிளந்து துடிதுடித்து இறந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிவசக்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வேளை தானியங்கி கதவு பழுதாகாமல் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என சக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.