ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் பரிதாப பலி : கோவையில் நேர்ந்த சோகம்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 4:24 pm
Bus Woman Jump And Dead -Updatenews360
Quick Share

கோவை : சூலூர் அருகே ஓடும் பேருந்திலிருத்து குதித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகிதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பால்பாக்கெட் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (வயது 37) ப்யூட்டீசனாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் இன்று ஈரோட்டில் நடக்க இருந்த ஒரு திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்ய சம்மதித்திருந்தார். அதற்காக நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஈரோடு அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தின் ஓட்டுநராக பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் நடத்துநராக பாபு என்பவர் இருந்துள்ளனர். டிக்கெட் வாங்கிய சிவசக்தி ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்தில் தானியங்கி கதவுகள் கோளாறு காரணமாக மூடப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பேருந்து பொள்ளாச்சி ,பல்லடம் சாலையில் சுல்தான்பேட்டை தாசநாய்க்கன்பாளையம் தாண்டி வந்து கொண்டிருந்தபோது சீட்டில் அமர்ந்திருந்த ப்யூட்டிசன் சிவசக்தி திடீரென எழுந்து பேருந்தின் முன்புற படிக்கட்டின் பகுதிக்கு திடீரென எழுந்து வந்தவர் பேருந்தில் இருந்து திடீரென வெளியே குதித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது ப்யூட்டீசன் சிவசக்தி மண்டை பிளந்து துடிதுடித்து இறந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிவசக்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வேளை தானியங்கி கதவு பழுதாகாமல் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என சக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 725

0

0