திருச்சி: துறையூர் அருகே கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையேயான தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.
அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மகன்கள் சந்திரசேகர் கார்த்திக் ஆகியோருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பான வினோத் முரளிதரன் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு கோயிலருகே எழுந்துள்ளது.
இந்த நிலையில் அம்பேத்கார் நகர் தெற்கு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சந்திரசேகரும் அவருடைய தம்பி கார்த்திக்கும் சென்ற போது அங்கிருந்த அருள் முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்த், வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.
மகன்கள் தாக்கப்படுவதை நேரில் பார்த்த அவர்களுடைய தாய் சிவகாமி சண்டையை விலக்கி விட சென்றார். அப்போது அவரும் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்து காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர். சிவகாமியின் பிரேதத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத விசாரணைக்காக அனுப்பிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.