Categories: தமிழகம்

கோவை அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் காயங்கள் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை : சுங்கம் பைபாஸ் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுங்கம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள முட்புதர்களுக்குள் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் அழுகிய நிலையில் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

நேற்று மாலை பெண் சடலத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும் இவர் கடந்த சில மாதங்களாக சுங்கம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்து வீடுகள் முன்பு காயப்போட்டு இருக்கும் துணிகளை எடுத்து அணிந்து கொள்வதை அந்த பெண் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதனால் அந்த பகுதிக்கு அவர் பரிச்சயமாக இருந்துள்ளார்.இந்த நிலையில்தான் இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலை கால் பகுதி மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் முதல் கட்டமாக பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த பெண்ணை யாராவது அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பதை பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

24 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

54 minutes ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

57 minutes ago

சென்னை புறப்பட்ட விஜய்.. பவுன்சர்களால் கொடைக்கானல் விவசாயிகள் அவதி.!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…

1 hour ago

டாப்ஸ்லிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற மருத்துவர்… சடலமாக திரும்பி வந்த சோகம்!

தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

This website uses cookies.