தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும் படியாக சொகுசு காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சுமார் 22 கிலோ கஞ்சாவினை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!
இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இலக்கியா காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், உத்தம பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.