தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும் படியாக சொகுசு காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சுமார் 22 கிலோ கஞ்சாவினை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!
இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இலக்கியா காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், உத்தம பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.