தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும் படியாக சொகுசு காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சுமார் 22 கிலோ கஞ்சாவினை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!
இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இலக்கியா காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், உத்தம பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.