Categories: தமிழகம்

தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை : குற்றவாளியை சுற்றி வளைத்த போலீசார்…

வேலூர் : வேலூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவகைதுர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (45) என்பவர் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அதைக்கண்ட சீனிவாசன் குடித்துவிட்டு ஏன் தகராறில் ஈடுபடுகிறாய் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த முருகேசன் மகன் சீனிவாசன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனின் மார்பு பகுதியில் பலமாக குத்தியதாக கூறப்படுகிறது. அதனால் அலறியபடி துடிதுடிக்க சீனிவாசன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இதையடுத்து முருகேசன் மகன் சீனிவாசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சீனிவாசனை மீட்டு உடனடியாக பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தகவலறிந்த இணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய முருகேசன் மகன் சீனிவாசனை கைது செய்தனர்.

KavinKumar

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

6 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

6 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

7 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

7 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

7 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

8 hours ago

This website uses cookies.