தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற வட்டார மருத்துவ முகாம் துவக்க விழா, மற்றும் 1.25 கோடி மதிப்பீட்டில் துணைசுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழா மற்றும் நலதிட்ட உதவிகளை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் இன்று துவக்கி வைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக சோளிங்கரில் பகுதியில் கண்பார்வை இழந்த யோகலட்சுமி, கை,கால்கள் செயலிழந்த பிரியதர்ஷினி ஆகிய இரு மாணவிகளை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- தமிழகத்தில் இதுவரை கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் ஒரே ஆண்டில் 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 8,64,934 நபர்கள் பலனடைந்திருப்பதாகவும், மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதார திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் முகாம்கள் மொத்தம் 385 முகாம்கள் நடத்த திட்டமிட்டு 54 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 25,824 பேர் மருத்துவ பயன்பெற்று உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இருந்தபோதிலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.