தென்காசி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி பாண்டி. இவருக்கு நேற்று விபத்து ஏற்பட்டதில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதன் பெயரில், எக்ஸ்ரே எடுக்கச் சென்ற காளி பாண்டிக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. அங்கு எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கையில் கொடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று கேட்ட காலிபாண்டிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம் தீர்ந்து போனதால் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு காளி பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ” தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில்கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே ஃபிலிம்-க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திருப்பது எலும்பு முறிவு வலியை விட மிக மோசமானது.தமிழகமெங்கும் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர்.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக்க தயார்!
அதனைத் தடுக்கின்ற பணிகளில் அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறபோதே, அரசு மருத்துவமனைகளின் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்த கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.