புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மையத்தின் உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கார் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கார் பராமரிப்பு மையத்தில் இன்று பணியில் இருந்த வாழைக்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர் மற்றும் உரிமையாளர் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலாஜி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த பாலாஜியின் உறவினர்கள் தகவலறிந்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யக்கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . மேலும் முற்றுகையில் ஈடுபட்ட பலாஜியின் உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.