புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மையத்தின் உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கார் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கார் பராமரிப்பு மையத்தில் இன்று பணியில் இருந்த வாழைக்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர் மற்றும் உரிமையாளர் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலாஜி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த பாலாஜியின் உறவினர்கள் தகவலறிந்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யக்கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . மேலும் முற்றுகையில் ஈடுபட்ட பலாஜியின் உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.